யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில்….. (காணொளி)

297 0

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அரச மருத்துவ சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ  சங்கத்தினரின் தொடர்ச்சியான போராட்டத்தின் நடவடிக்கையாக இன்று நாடுமுழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பெருமளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்கு வருகை தந்துள்ள நிலையில், ஒரு சில வைத்தியர்களே கடமையில் ஈடுபட்டுள்ளதால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நோயாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.