இலங்கைக்கு அதிவேக கண்காணிப்பு படகு வழங்கும் இந்தியா!

272 0

இலங்கை கடற்படையினருக்கு அடுத்த மாதமளவில் அதிவேக கண்காணிப்பு படகொன்று இந்தியாவினால் வழங்கப்படவுள்ளது.

இந்திய அரசாங்கம் இலங்கை கடற்படைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளின் அடிப்படையில் இந்த படகு இலங்கைக்கு வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகு கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு வழங்குவதற்கான மற்றுமொரு கண்காணிப்பு படகின் கட்டுமான பணிகள் கடந்த செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.