இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சானக ஐலப்பெரும விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தொழில் பெற்றுத்தருவதாக கூறி 200,000 ரூபா மற்றும் 150,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையின் (ஐக்கிய தேசியக் கட்சியின்) முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டொன் ஹரிந்திர சானக ஐலப்பெரும இன்று (26) காலை விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மத்திய மாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (ஐக்கிய தேசியக் கட்சி) சானக ஐலப்பெரும இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (26) காலை கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

