நேற்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பொன்னம்பலம் – ராணிதேவி தம்பதியின் கனிஷ்ட புதல்வியாவார்.
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டில் சட்டமாணி பட்டத்தினைப் பெற்று, 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

