ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி இன்றும் தொடரவுள்ளது

283 0

Untitledஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணியின் மூன்றாம் நாள் இன்றாகும்.
இந்த பேரணி, நிட்டம்புவயில் இருந்து இன்று ஆரம்பமாகின்றது.
மஹிந்த தலைமையில் கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிக்கு தடைவிதிக்கவேண்டும் என்றுக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வரக்காபொலை நீதிமன்றம் நேற்று இந்த மனுவை நிராகரித்தது.
ஐக்கிய தேசியக்கட்சி, அங்கத்துவர் அதிகரிப்பு நடவடிக்கையை வரக்காபொலயில் நடத்தவுள்ளது.
இதற்காக காரணங்களை காவல்துறை தரப்பு நீதிமன்றத்துக்கு காட்டியபோதும், மஹிந்த தரப்பின் சட்டத்தரணிகளின் கருத்துக்களை ஏற்ற நீதிவான் இந்த மனுவை நிராகரித்தார்.
இதேவேளை கடவத்த மற்றும் கிரிபத்கொட ஆகிய இடங்களிலும் இந்த பேரணிக்கு தடைவிதிக்கப்படவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் மஹர நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டன.