இந்திய விஜயத்தில் பேசப்பட்டது என்ன?

242 0

இலங்கைக்கும், இந்தியாவும் இடையில் அனுமான் பாலத்தை அமைப்பது தொடர்பில் தமது இந்திய விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய பிரபாத் கம்மன்பில, பிரதமர் இந்திய விஜயம் குறித்து நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,தமது இந்திய விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள் என்னவென்பது அங்கு கைச்சாத்திடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்புகள் பற்றிய அரசியல் ரீதியான புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் தம்புள்ள வரையான நெடுஞ்சாலையை அமைப்பது பற்றியே இந்தியாவுடன் பேசப்பட்டது.

மேலும், இந்த நெடுஞ்சாலையை தம்புள்ளயில் இருந்து எவ்வாறு குருநாகலுடன் இணைப்பது என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டதாக பிரதமர் கூறியுள்ளார்.