இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!ஒருவர் பலி

223 0

மாதம்பே -குளியாப்பிடி வீதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதினால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாரவூர்தி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது, எதிர் திசையில் பயணித்துள்ள உந்துருளி ஒன்றுடன் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இதன்போது 35 வயதுடைய வெலிபென்னகஹமுல – துனுகந்த பிரதேசத்தினை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.