கொழும்பு – மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதிராஜா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (05) இரவு மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

