மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

81 0

இரத்தினபுரி – கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுவாகல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை  (05)  மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கிரிஎல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிரிஎல்ல மாட்டுவாகல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.