இரண்டு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

94 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை (03) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (04) பிற்பகல் 12.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, கந்தகெட்டிய, ஹப்புத்தளை, ஊவா பரனகம, மீகஹகிவுல, சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவற்றிற்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளது.