தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்க நடவடிக்கை

419 0

தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவை அதிகாரமிக்க நிறுவனமொன்றாக அமைப்பதற்கும் அதற்காக சட்டமூலம் ஒன்றை தயாரிப்பது தொடர்பிலும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு 2010ம் ஆண்டே அங்கீகாரம் கிடைத்த நிலையில் அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

தற்பொழுது வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை சேதங்களை கட்டுப்படுத்துவது அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய சவாலாக காணப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது