இராஜாங்க அமைச்சரை ஆஜராகுமாறு உத்தரவு

297 0

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் அராய்ச்சித்துறை இராஜாங்க அமைச்சரும் லக்ஷ்மன் செனவிரட்னவை, பதுளை நீவதான் நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 12ஆம், ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீவதான் நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்ததன் பின்னரே, நீதவான் ருவந்திகா மாரசிங்க மேற்கண்டவாறு உத்தரவிட்டார். ​அத்துடன், அழைப்பாணையையும் அனுப்புமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு பணித்தார்.

கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கடமையில் ஈடுபட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினரைத் தாக்கியமை குறித்த முறைப்பாடு தொடர்பிலேயே, மேற்படி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அன்றையதினம் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. –