புத்தூர் கிழக்கில் அதிகாலை பயங்கரம்! வீடு புகுந்து நகைகள் கொள்ளை!

280 0

புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த நேரம் உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 18½ பவுண் தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளனர். திருடப்பட்ட நகையின் பெறுமதி 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியினை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்