யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டதாக வௌ்ளிக்கிழமை (14) அன்று சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சனிக்கிழமை (15) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

