நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கல்முனை அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை (17) இடம்பெற்றது.
இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சேதமடைந்துள்ள நிலையில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

