கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுங்கள் – மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்து

348 0

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது குறித்து பிரதமர் மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கை தடுப்பில் உள்ள தமிழக மீனவர்களின் 134 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

படகுளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிடப்பட்டிருந்தபோதிலும், இறுதி அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.

இலங்கை பிரதமரின் இந்திய விஜயத்தின்போதும் இது குறித்து எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.