ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பொதுமக்கள் பலி

262 0

வடகிழக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பொதுமக்களும், குர்திஸ் தலைமையிலான படையினரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹசாகேக் மாகாணத்தின் சாடாடி நகரில் உள்ள இடைத்தங்கல் முகாமை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்றுள்ளமையை மனித உரிமைகள் அமைப்புகளும், அரசாங்க சார்ப்பு ஊடகங்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

ஆனால் எந்த அளவான மக்கள் பாதிப்புகள் இடம்பெற்ற என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை.

எனினும் 25க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.