சிறிகொத்த யானைக்கு துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

225 0

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள யானை சின்னத்துக்கு துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் கீழ் விசேட விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.