இஸ்ரேல் சுதந்திர தினத்தில் சுதந்திர தின விழாவில் ஒளி ஜோதியை ஏற்றியுள்ளார்

221 0

இந்தியாவைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் டினா சிமாடா இஸ்ரேலில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஒளி ஜோதியை ஏற்றியுள்ளார்.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் டினா சிமாடா தற்போது இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வருகிறார். அந்நாட்டின் 69-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அவ்விழாவில், கலந்து கொண்ட சிமாடா ஒளி ஜோதியை ஏற்றியுள்ளார்.

மேலும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் கல்வி நிறுவனம் மற்றும் பிரபல பாடகர்களுடன் இணைந்து சிமாடா சிறந்த பாடகராகவும் அவ்விழாவில் ஜொலித்துள்ளார். இந்த வாய்ப்புக்காக அவர் தனது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அர்த்தமுள்ள சாதனைகளை நிகழ்த்த தன்னை தூண்டியதற்காக நன்றி தெரிவிப்பதாக சிமாடா கூறியுள்ளார்.

யூத நாடான இஸ்ரேல் நேற்று தன்னுடைய 69-வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடியது. அப்போது இஸ்ரேல் நாடு உருவாகுவதற்காக உயிர்நீத்த 23,544 பேருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.