போலி நாணய தாள்கள் – மூன்று பேர் கைது

263 0

போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த மூன்று பேர், இரண்டு பகுதிகளில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீரிகம – கிதலவலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டனது.

இவர்களிடம் இருந்து 6, ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 5, 500 ரூபாய் நோட்டுகள், 41 நூறு ரூபா நோட்டுகள், 10 இருபது ரூபா நோட்டுகள் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள், போலி நாணய தாள்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தம்பதெனிய பகுதியயைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுகளை உடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனது.

இதனிடையே, போலி 5 ஆயிரம் ரூபா நோட்டுகள் இரண்டுடன் அநுராதபுரத்தில் வைத்து 30 வயதான ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.