யாழ்.குடாக் கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகள் 30 பேர் மீட்பு!

289 0

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மியன்மார் பிரஜைகள் 30 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று யாழ்பாணம் காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்க்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் இந்தியர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கிருந்து முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.