மே தினத்திற்குப் பிறகு ஐ.தே.கவில் மாற்றங்கள்

283 0

மே தினத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கட்சியின் பிரதான பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது.

அத்துடன், தொகுதி அமைப்பாளர் பதவிகளிலும் மாற்றங்கள் செய்வதற்கு கட்சியின் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொகுதி அமைபபாளர் பதவிகளில் இருந்தும் கட்சிக்காக எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத அமைப்பாளர்களை நீக்குவதற்கும் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், பல வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மாற்றங்களானது எதிர்வரும் தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான அடித்தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.