குடும்ப தகராறு – வீட்டை கொழுத்தியவர் கைது

259 0

குடும்பத்தகராறு காரணமாக தனது வீட்டைத் தானே எரித்ததாகச் சந்தேகிக்கப்படும் வீட்டு உரிமையாளரை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள வீடொன்றில் திருமணமாகி 5 மாதங்களே ஆன தம்பதிகளுக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவனுடன் சண்டையிட்டு தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து வீட்டின் படுக்கை அறையை கணவன் தீயிட்டுக்கொழுத்தியுள்ளதாக மனைவி விசாரணைககளின்
போது தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒருதடவை கணவன் தன்னை கொலை செய்வதற்காக சமையலறையில் கேஸ் சிலிண்டரைத் திறந்து வைத்திருந்ததாகவும் மனைவி முறையிட்டுள்ளார்.

சம்பவம் காரணமாக குறித்த வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.