மேற்படி சூதாட்ட நிலையம் சுற்றி வர மதிற் சவர் கட்டப்பட்டு பிரதான வாயிலில் இரும்பு கடவை போடப்பட்டு யாரும் உற்பிரவேசிக்க முடியாத நிலையில் அமைக்கப்பட்டு இரகசியமான முறையில் சூதாட்டம் இடம் பெற்று வந்துள்ளது.
மேற்படி கைதின் போது சூதாட்டத்தில் பயன் படுத்தப்பட்ட 31 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெல்தெனிய பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் அமரசிங்கவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் படி மெனிக்கின்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம். சந்திரபால தலைமையிலான குழுவினரே மேற்படி முற்றுகையை மேற்கொண்டனர்.
இது தொடர்பான, மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

