கம்பஹா – கிரிந்திவெல துப்பாக்கி பிரயோகம்.. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை

521 0

கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 பேரையும் 48 மணித்தியாலங்கள்  தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு காவற்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜீப் ரக வண்டி ஒன்றில் பயணித்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 2 பேர் கம்பஹா குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது சந்தேக நபர்கள் துப்பாக்கி ஒன்று மற்றும் 8 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 8 ஆம் திகதி இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.