சட்டவிரோதமான முறையில் கஞ்சாவை வைத்திருந்த 06 பேர் கைது

258 0

தனமல்வில, எம்பிலிபிட்டிாயன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கஞ்சாவை வைத்திருந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் புத்தள முகாம் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்த 18 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.