மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

245 0

வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்தில் இன்று ( 29) காலை 10.00 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கப்பாச்சி செட்டிக்குளத்தில் வசித்து வரும் சின்னச்சாமி விஜயகாந்தன் (வயது – 29) என்ற நபர் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் வழமை போன்று இன்று வவுனியா சாம்பல் தோட்டம் சென்று கிணறு வெட்டும் போது, கிணறு வெட்டும் இயந்திரத்தில் ( கொம்பிறசர்) மின்சார கசிவு ஏற்பட்டதில்,  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வைத்திய பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.