காணாமல் போனோர் போராட்டத்துக்கு கோயில்குடியிருப்பு மாதர் சங்கம் ஆதரவு

224 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 53  ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகின்றனர்.

ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்நெடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கோயில்குடியிருப்பு மாதர் சங்கத்தினர் இம்மக்களுக்கு ஆதரவாக இன்று வருகைதந்து அவர்களுக்கு ஆதரவு  வழங்கினர்.

இங்கு கருத்து வெளியிட்ட கோயில்குடியிருப்பு மாதர் சங்கத்தின் தலைவி இன்று ஒருநாள் இந்த தகரகொட்டகையில் இருக்கும்போது அவர்களின் வேதனை புரிகிறது இந்த வீதிவழியாக செல்கின்ற போது இந்த உறவுகளை நினைக்கும் போது எமது இரத்தம் கொதித்தது அந்தவகையிலேயே இன்று இவர்களுடன் ஆதரவு வழங்கி இந்த போராடத்தில் கலந்து கொண்டுள்ளோம்.

ஏனைய அமைப்புக்கள் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளும் இணைந்து இம்மக்களின் தீர்வுக்காக போராடவேண்டுமென கோரினார்.