கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமித்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலான பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

