ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு எதிரான யோசனை மீது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பு மூலம் மேலதிக 317வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போது பிரதி வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று அங்கு சென்றிருந்தது.
இது தொடர்பாக இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இந்த நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேசத்துடன் ஒன்றிணைப்பதற்கு அரசாங்கம் முக்கியத்தும் வழங்குவதாக கூறினார்.

