கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

262 0

சவூதி அரேபியா தொடக்கம் இந்தோனேஷியா வரை பயணித்த விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்துள்ள பயணி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போன பயணி, 75 வயதுடைய இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர் என்பதுடன், நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, உயிரிழந்துள்ளதாக விமான நிலைய காவற்துறை பிரிவு தெரிவித்துள்ளது.