மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சமின்றி நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

197 0

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சம் பாராது நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் ஏற்பட்ட அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று விசேட விவாதம் இடம்பெற்றது.

இதற்கான பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

குப்பைக் கூலங்கள் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.