சிகரட்டின் விலை அதிகரிப்பால் பீடி பாவனை அதிகரிக்காது

232 0

சிகரட்டின் விலை அதிகரித்தமையினால் பீடி பாவனை அதிகரிக்கும் என்ற தவறான கருத்து பரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மற்றும் புகையிலைத் தொழிற்றுறை தொடர்பான ஆய்வு மையம் கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீடி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் தென்டு இலை இறக்குமதி செய்வதில் துரித வளர்ச்சி காணப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சிகரட் விலை அதிகரித்திருப்பதனால் அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம் குறைந்துள்ளதென்று கூறப்படுவது உண்மையல்ல என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மற்றும் புகையிலைத் தொழிற்றுறை தொடர்பான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.