திருகோணமலையில் சட்டதரணிகள் ஆர்ப்பாட்டம்

213 0

அண்மையில் வேலையில்லா பட்டதாரிகளின் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்து, இன்று சட்டதரணிகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

கடந்த 24ஆம் திகதி வேலையில்லா பட்டதாரிகள், கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டமானது பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காகவாறும் அமைதியான முறையிலும் நடத்தப்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த உத்தரவை அவமதித்து செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டதரணிகள் ஒன்றிணைந்து, கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.