தனியான அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம்

261 0

நாட்டில் செயற்படுத்தப்படும் வினைத்திறன் மற்றும் முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக 2020ஆம் ஆண்டு கட்சியின் தனியான அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். திட்டங்கள் இல்லாத அனைத்து துறைகள் குறித்து கவனம் செலுத்தி முறையான வேலைத்திட்டம் ஒன்றை நல்லாட்சி அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும்.எதிர்காலத்தில் தனியான அரசாங்கமாக பதவிக்கு வருவதற்கான வலுவை சேர்க்க அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் விஜேபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.