ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது

225 0

ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது என வௌிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி  சில்வா தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு எதிரான பிரேரணை ஐரோப்பிய பாராளுமன்றில் நேற்று 317 வாக்குகளால் தோல்விடைந்தது.

குறித்த சந்தர்ப்பத்தின் போது ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றிருந்த பிரதிநிதிக்குழுவில் வௌிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி  சில்வாவும் ஒருவர்.

இன்று அது தொடர்பில் வௌி விவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் , இந்நாட்டு பொருளாதாரத்தை சர்வதேசத்துடன் தொடர்பு படுத்த அரசு முன்னுரிமை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.