நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பெண்கள் குளவிகொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதுடன் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.