இலங்கை அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர்

230 0

தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கின்ற இலங்கை அகதிகள் 46 பேர் நேற்று வியாழக்கிழமை இலங்கைகை வந்தடைந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

திருச்சியிலிருந்து இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் இலங்கை திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பியவர்களுள் திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரா. ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் 4 பேர், ஈரோடு பவானிசாகர் முகாமிலிருந்து நா. சண்முகப்பிரியன் (23), புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை அகதிகள் முகாமைச் சேர்ந்த நா. சுதாகரன் மற்றும், ஐ. சௌந்தரராஜ் (34) குடும்பத்தினர் 7 பேர், புதுக்கோட்டை அழியாநிலை முகாமைச் சேர்ந்த ய. ரூபகாந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர், நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் அவரது மனைவி கோமதி, திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 3 பேர், சிவகங்கை மாவட்டம் மூங்கிலூரணி முகாமைச் சேர்ந்த 5 பேர் உள்பட 16 ஆண்கள், 21 பெண்கள், 5 சிறுவர்கள், 4 சிறுமிகள் உள்பட 46 பேர் இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளதாக வௌியிடப்பட்டுள்ளது.