இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என மலேசியாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றனஸ் என்ற மலேசியாவின் இரட்டை கோபுரம் என்று சொல்லப்படுகின்ற டுவன் டவரின் மேலாளர் டட்டுக் வான் சுல்கிபிலி இன்று (27) ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெற்றனஸ் என்ற இரட்டை கோபுரமும் அதன் அமைப்பு நிறுவனமும் சர்வதேச தரத்தில் 500ஆவது இடத்தில் தரம் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.