பொது ஆட்சேபனைகளை தவிர்க்கும் யோசனை அரசாங்கத்திடம் இல்லை

226 0

பொது ஆட்சேபனைகளை தவிர்க்கும் யோசனை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பகிஸ்கரிப்பு செயற்பாடுகளின் போது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அமைச்சர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த கருத்துக்களை வெளியிட்டார். எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களை ஒழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கத்திற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி ஒருபோதும் இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு குறித்த பதவிகளை வழங்குவதையிட்டு தாம் பாராட்டுவதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.