மஹிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்துக்கொள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்குத் தடை

213 0

காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மஹிந்த அணி தரப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் மே தின கூட்டம் கண்டி – கெடம்பே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் அங்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுப்படுவதற்கு கட்சியின் தலைமைத்துவங்களே பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.