டமஸ்கஸ் வானூர்தி நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம்

247 0

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் வானூர்தி நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிரியாவில் செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை உறுதி செய்துள்ளன.

சம்பவத்தின் சேத விபரங்களோ உயிர் சேதங்கள் குறித்த விபரங்களோ உடனடியாக வெளியாகவில்லை.

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரையில் எந்த அமைப்பும் உரிமை கோராத நிலையில், அமெரிக்க எதிர்ப்பு குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக இதுவரையில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.