காஸ்மீர் பகுதியில் கடும் பதற்ற நிலை

241 0

இந்தியா – காஸ்மீரின் கப்வாரா பகுதியில் கடும் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அங்கு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 5 படையினர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானை தளமாக கொண்ட இரண்டு தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து இன்று பிற்பகல் குறித்த இரண்டு பேரின் சடலங்களையும் வழங்கக் கோரி, கப்வாராவில் பிரிவினைவாதிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதன்போது பாதுகாப்ப தரப்பினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து படையினர் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.