சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற இலங்கை தொடர்ந்தும் பேச்சுவார்த்தை

244 0

சர்வதேச நாணய நிதியத்திடம் அடுத்த தவணைக் கடனைப் பெறுவதற்காக இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இலங்கைக்கும் வந்திருந்ததாக கூறப்படுகிறது.

நாணய நிதியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களை அமுலாக்குவது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், இதற்கான இணக்கம் விரைவில் காணப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜுன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தக்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெறும் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.