பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கைக்கான ஜெர்மன் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்

265 0

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கைக்கான ஜெர்மன் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை இராஜினாமா செய்த பின், அவருக்கு இராஜதந்திர பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மற்றுமொருவர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,கடந்த மாதங்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தனது பதவியிலிருந்து ஓய்வுப்பெறவுள்ளார் என போலியானச் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.