பாம்பு கடிக்கு உள்ளான பெண் பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி பலி!

224 0

வவுனியாவில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில்,  சிகிச்சைபெற்றுவந்த பெண் பொலிஸ் சார்ஜன் சிகிச்சை பலனின்றி நேற்று (26) இரவு உயிரிழந்துள்ளார்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி மாலை புடையன் பாம்பு கடித்ததில் குறித்த பெண் பொலிஸ் சார்ஜன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன்  (42) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

தற்போதும் இவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.