கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலுக்கு பிணை

232 0

மெராயா நகரத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 26.04.2017 அன்று காலை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க த சில்வா முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஐயாயிரம் ரூபாய் காசு பிணையிலும், ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி இந்திக்க த சில்வா உத்தரவிட்டுள்ளார்.