இந்தியாவால் ஸ்ரீலங்கன் விமானச் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

246 0

வங்காள விரிகுடாவில் இந்திய விமானங்கள் ஒத்திகையில் ஈடுபடவுள்ளதால் நாளை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஸ்ரீலங்கன் விமானச் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மலேஷியா இந்தோனேஷியா சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்காக பயணம் செய்யும் விமானங்கள் மற்றும் அங்கிருந்து இலங்கை வரும் விமான நேரங்களில் மாற்றம் ஏற்படும் என ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு 11 ஸ்ரீலங்கன் விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படும் என அந்த நிறுனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.