மருதங்கேணியில் மணல் அகழ்வதற்கு நிபந்தனையுடன் மக்கள்இணக்கம்

261 0
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றிற்காக மணலைப் பெறுவதில் ஏற்பட்ட நீண்ட  தாமதம் மாவட்டச் செயலகத்தின் இரு வார முயற்சியினையடுத்து  மருதங்கேணி மக்கள் நிபந்தனையுடன் இணக்கத்தை வழங்கினர்.
யாழ். மாவட்டத்தினில் இதுவரை காலமும்  மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் விநியோகம் தடைப்பட்டமையினால் குறித்த தடை நீங்கும் வரையில் மாற்று ஏற்பாடாக புதிய இடத்தில் தற்காலிகமாக மணல் அகழ்வது தொடர்பில் இனம் கானப்பட்ட பிரதேசத்தின் பிரதேச அமைப்புக்கள் உள்ளூர் வாசிகளுடன் கடந்த இருவாரமாக மாவட்டச் செயலகத்தினால்  கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாழ்.மாவட்டத்தில் தற்போது  இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி கட்டுமானப்  பணிகள் என்பன மணலைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக தடைப்படாமல் இருப்பதற்காக மணல்  விநியோகம் மேற்கொள்ளும்  அதேவேளை அதன் வருமானமும் வேலை வாய்ப்பும் அப்பகுதிக்கே கிடைப்பதனையும் உறுதிப்படுத்தப்படவேண்டும். யாழ். குடாநாட்டில் மணல் விநியோகம் தடைப்படுமாணால் மாவட்டத்திற்கு கிடைக கும் வீட்டுத்திட்டமும் அபிவிருத்திகளிற்கான கட்டுமாணப்பணிகள் பாதிப்படைவது மட்டுமன்றி தமது வாழ்வாதாரத் தொழிலாக கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலமையே காணப்படும்.
இதேநேரம் மாவட்ட செயலக வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகத்தினால் அனுமதிக்கப்பட்டு மணல் அகழ்வு இடம்பெற்ற 3 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது ஆளுகைப் பகுதியாக வர்த்தகமாணி அறிவித்தலைப் பிரகடணம் செய்தமையே அப்பகுதியில் இடம்பெற்ற மணல் விநியோகம் தடைப்படுவதற்கு காரணமாக அமைந்தது. இருப்பினும் அத் தடையை நீக்க நிர்வாக நீரிதியல்  உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும். அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து மணல் அகழ்விற்குரிய பி்தேசத்தை பெறுவதற்கும் நடவடிக்கை இடம்பெறும்  எனவும் மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
அது சிலவேளைகளில் 6 மாதம் வரையில் செல்லக்கூடும் இந்த நிலையில் அதுவரையில் மணல் விநியோகம் இடம்பெறாமல் இருக்க முடியாது என்ற காரணத்தினாலேயே அம்பணையண்டிய குறித்த இடத்தில்லுள்ள உயர்ந்த திட்டியில் இருந்து இயந்திரங்களைப் பயன்படுத்தாது மனித வளங்களை மட்டுமே பயன்படுத்தி மணலை விநியோகிப்பதன் மூலம் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் அந்தப் பகுதியில் உள்ளவர்களிற்கு வேலை வாய்ப்பினை வழங்கி மணல் விநியோகம் மேற்கொள்ளப்படும். என மாவட்டச் செயலகம் தரப்பால் தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில்  உள்ளூர் அமைப்புக்கள் ஏற்கனவே ஓர் நிறுவனம் மணல் விநியோகம் என்ற பெயரில் பாரிய குழிகள் மூலம் அப்பகுதிகளிற்கு ஆபத்தினையும் சுற்றுச் சூழல் பாதிப்பினையும் ஏற்படுத்தியபோதும் அதனை சீர் செய்யவில்லை. என குற்றம் சாட்டியிருந்த்தோடு அந்தநேரம் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் கூட இதனை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ திறனியற்றே இருந்த்தோடு அதனை நிவர்த்தி செய்யவும் இல்லை  எனவும் தங்கள் மன ஆதங்கங்களை தெரிவித்ததோடு சில நிபந்தனைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் தமது  இணக்கத்தினை வெளியிட்டனர்.
அதாவது கரையை அண்டிய பகுதியின் வீதியூடாக மணல் ஏற்றும் வாகனம் பயணிக்ககூடாது. பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அமைப்புக்களால் சிபார்சு செய்யப்பட்ட திட்டத்தை மாவட்டச் செயலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் . உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.