காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்புப்போரட்டம் 50வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்க்பபட்டு வருகின்றது.

217 0
முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்புப்போரட்டம் 50வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்க்பபட்டு வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொடர்கவனயீர்ப்புப்போராட்டமானது இன்று 50வது நாளாகவும் தொடர்ந்து கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்ட்டு வருகின்றது.
குறித்த போராட்டமானது தொடர்ந்து தகரக்கொட்டகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமையால் கடும் வெயிலில் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர் தங்களுடைய உயிர் பிரிந்தாலும் பறாவாயில்லை, எட்டு வருடங்களாக தேடிக்கொண்டிருக்கின்ற எங்களது உறவுகள் தொடர்பான உரிய பதிலையே இந்த அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதே எங்களின் ஒட்டுமொத்தக்கோரிக்கை.
இதற்கு இந்த அரசு செவி சாய்க்காது போனால் நாங்கள் தொடர்ந்து அரசுக்கு சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலேயே போராட்டத்தை முன்னெடுப்போம் என அந்த மக்கள் தெரிவிததுள்ளனர்.